அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

Published Date: December 31, 2022

CATEGORY: CONSTITUENCY

புதூர், டிச.31- புதூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, அன்பழகன் நூற்றாண்டு விழா கிறிஸ்மசையொட்டி ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதாரக் குழு உறுப்பினர் 16 வட்ட மாநகராட்சி உறுப்பினர் அந்தோனியம்மாள் சவுரிராயன் தலைமை தாங்கினார். புதூர் பகுதிச் செயலாளர் ஜீவா, பொது சுகாதாரக் குழுத் தலைவர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 14-வது வட்டச் செயலாளர் வேலு வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:-

கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் நிதியை உயர்த்திக் காண்பித்தோம். அதேபோல் இந்த ஆண்டும் உயர்த்திக் காண்பிப்போம். எந்த மதமாக இருந்தாலும் பேரறிஞர் அண்ணா சொன்னது போல் மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் எல்லா மக்களுக்கும் பாசத்துடன், மரியாதைடன் இருக்க வேண்டியவர்கள்தான் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. வடக்கு மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர் ராதா, அவைத்தலைவர் ஒச்சுபாலு, துணைச் செயலாளர்கள் மூவேந்திரன், சின்னம்மாள், வக்கீல் ராகவன் ஜெய்ஹிந்த் புரம் பாண்டி, மாணவரணி புதூர் சின்னத்துரை, புதூர் பகுதி அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், என்ஜினியர் திலீபாகரன், 12-வது  வட்டச் செயலாளர் காந்திபுரம் மருது, சம்பகுளம் ஆழ்வார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Media: DAILYTHANTHI