இதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில்களுக்கு, சிங்கப்பூர் அமைச்சர், அவரது குடும்பத்தினரை பழனிவேல் தியாகராஜன் அழைத்துச் சென்றார்.

Published Date: December 14, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, டிச. 13: மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில்,  சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்,  தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை படகு சவாரி செய்தார்.

சிங்கப்பூர் நாட்டின் வர்த்தகம்,  போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரன், தனது குடும்பத்தினருடன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஈஸ்வரனை,  தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது இல்லத்தில் வரவேற்றார்.  இதைடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  வண்டியூர் மாரியம்மன்  கோயில்களுக்கு,  சிங்கப்பூர் அமைச்சர்,  அவரது குடும்பத்தினரை பழனிவேல் தியாகராஜன் அழைத்துச் சென்றார்.  அங்கு கோயில்களில் தரிசனம் செய்த அமைச்சர் ஈஸ்வரன்,  குடும்பத்தினர் வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சவாரி மேற்கொண்டு மைய மண்டபம், தெப்பக்குளத்தைச் சுற்றிப்பார்த்து அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.  அவர்களுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் படகு சவாரி மேற்கொண்டார்.

Media: Dinamani