பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் 37 நாள் பயிற்சி துவக்கம்

Published Date: November 30, 2021

CATEGORY: HUMAN RESOURCE POLICY

பதவி உயர்வுக்கு வழிவகுக்குக்ம் 37 நாள் பயிற்சி துவக்கம்

சென்னை , நவ. 10 புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர் களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். 

புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு  பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் 17ம் தேதி முதல் இந்த அடிப்படைப் பயிற்சி தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்  காரண மாக மாநிலம் முழுவதும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்திற்கு மேல் நிலுவை ஏற்பட்டது.

இது குறித்து விவரம் அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் அந்தந்த மாவட்டதிலேயே பயிற்சி வழங்கி தகுதி காண் பருவம் பூர்த்தி செய்யப்பட வேண்டு மெனவும் இதன் மூலம் அவர்கள் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை வழங்கலாம் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ்  அறிவிக்கை வெளியிட்டார்.

   இந்தநிலையில், முதற்கட்டமாக இந்த செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவு செய் யப்பட்டு மொத்தம் 250 அரசு பணி பயிற்சியாளர்களுக்கு நேற்று சென்னை, அண்ணாநகர்,  ஸ்ரீ கிருஷ்ணசாமி  மகளிர்  கல்லூரியில் நிதி மற்றும் மனித வன மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் பயிற்சி துறைத் தலைவர் வெ. இறையன்பு. மனித வன மேலாண்மைத் துறை அரசு செயலாளர் மைதிலி கராஜேந்திரன், சென்னை கலெக்டர் விஜ பாராணி, கல்லூரி முதல்வர் அனிதா ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானிசாகர் அரசு அலுவவர் பயிற்சி நிலையம் ஆகியவை பயிற்சி துறைத் தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பயிற்சி நிலையங்களாகும். இந்த பயிற்சி நிலையம் மூலம் இதுவரை 1,29,813 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு அணிகளாக பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர் கணக்கு அலுவலர் உதவி இயக்குனர் (ஊரக வளர்ச்சி) ஆகிய பல்வேறு துறை அலுவலர்களை கொண்டு அலுவலக நடைமுறை பணி நடைமுறை பொதுமக்கள் தொடர்பு கணக்கு, ஊரக வளர்ச்சி, கணினி, போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

   முதல்வரின் அறிவிக்கைக்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதே பாடத்திட்டங்களை கொண்டு மாவட்ட அளவிலான பயிற்சியை நடத்துவதற்கு உரிய அரசாணை பெறப்பட்டு, அந்த அந்த மாவட்டங்களில் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர் களைக் கொண்டு பல்வேறு துறை உயர் அலுவலர்களையும் இணைத்து அவர்களை சிறப்பு விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டு ஒரு மாவட்டத்தில் அணிக்கு குறைந்தபட்சம் 250 பயிற்சியாளர்களை தேர்வு செய்யப்பட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது.

Media: Dinakaran